Sunday 19th of May 2024 02:47:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையர்களுடன் வரும் விமானங்களை  தினசரி ஒன்றாக மட்டுப்படுத்த முடிவு!

இலங்கையர்களுடன் வரும் விமானங்களை தினசரி ஒன்றாக மட்டுப்படுத்த முடிவு!


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் அதிகளவான இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் இலங்கையர்களை அழைத்துவரும் விமான சேவைகளை மட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இன்று முதல் தினமும் ஒரே ஒரு விமானம் மட்டுமே இலங்கையர்களுடன் நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் என கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 4 நாட்களில் 102 கோவிட் 19 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்தே வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவருவதை மட்டுப்படுத்த தீா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE